Home
About
TAM-NEWS
Home
Forms
G.O
10th
12th
Kalvi tv
Guide
Study materials
Tnpsc
Trb
Home
TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை
TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை
www.tamnews.in
-
8:16 AM
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
கடந்த
27.4.2017
அன்று
பட்டதாரி
ஆசிரியர்
காலிப்பணி
இடங்கள்
குறித்த
அறிவிப்பாணை
வெளியிட்டது
.
அதில்
பள்ளிக்கல்வி
துறையில்
595
பின்னடைவு
காலிப்பணியிடங்களும்
,
286
தற்போதைய
காலிப்பணி
இடங்களும்
,
தொடக்கக்கல்வி
துறையில்
28
பின்னடைவு
காலிப்பணி
இடங்
களும்
,
சமூக
பாதுகாப்பு
துறையில்
3
இடங்களும்
,
அனைவருக்
கும்
இடைநிலை
கல்வித்திட்டத்தின்
கீழ்
202
இடங்களும்
என
மொத்தம்
1,114
இடங்கள்
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டன
.
இதன்படி
,
தகுதியானவர்களை
அழைத்து
சான்றிதழ்
சரிபார்ப்பு
நடத்தப்பட்டு
,
தற்காலிக
தேர்வு
பட்டியல்
கடந்த
ஜூன்
30-
ந்தேதி
வெளியானது
.
இதில்
தொடக்கக்கல்விபட்டதாரி
ஆசிரியர்கள்
,
சமூக
பாதுகாப்பு
துறை
பட்டதாரிஆசிரியர்கள்
,
அனைவருக்கு
இடைநிலை
கல்வித்திட்டத்தின்
கீழ்
பட்டதாரி
ஆசிரியர்களை
கலந்தாய்வுக்கு
அழைத்துவிட்டதாக
கூறப்படுகிறது
.
ஆனால்
பள்ளிக்கல்வி
பட்டதாரி
ஆசிரியர்களை
கலந்தாய்வுக்கு
அழைக்கவில்லை
என்று
தற்காலிக
தேர்வு
பட்டியலில்
இடம்பெற்றிருந்தவர்கள்
மனவருத்தத்துடன்
தெரிவித்து
வருகின்றனர்
.
இதுகுறித்து
விழுப்புரம்
மாவட்டத்தை
சேர்ந்த
ரவி
,
அரியலூர்
மாவட்டத்தை
சேர்ந்த
விஜயகாந்த்
,
கிருஷ்ணகிரிமாவட்டத்தை
சேர்ந்த
வேடியப்பன்
,
கொடைக்கானலை
சேர்ந்த
கலைச்செல்வி
,
நாமக்கல்
மாவட்டத்தை
சேர்ந்த
சியாமளா
ஆகியோர்
கூறியதாவது
:-
சான்றிதழ்
சரிபாப்பு
முடிந்து
,
தற்காலிக
தேர்வு
பட்டியல்
வெளியானதும்
,
நாங்கள்
ஏற்கனவே
பணிபுரிந்து
வந்த
தனியார்
பள்ளிகளில்
இருந்து
பணியில்
இருந்து
விலக்கிவிட்டார்
கள்
.
இந்த
பணியை
நம்பி
கடந்த
4
மாதங்களாக
தவமாய்
தவம்
இருந்து
காத்து
கொண்டு
இருக்கிறோம்
.
எங்களுடன்
தேர்வு
செய்யப்பட்டவர்களில்
சிலர்
பணிக்கு
சென்று
2
மாதம்
சம்பளத்தையும்
வாங்கிவிட்டனர்
.
பள்ளிக்கல்வி
பட்டதாரி
ஆசிரியர்கள்
பணிக்கு
தேர்வு
செய்யப்பட்ட
எங்களை
மட்டும்
ஓர
வஞ்சனையாக
ஒதுக்கி
வைத்து
இருக்கிறார்கள்
.
இதுகுறித்து
பள்ளிக்கல்வி
துறை
அதிகாரிகளிடம்
தொடர்பு
கொண்டு
பேசினால்
காத்து
இருங்கள்
என்று
சொல்கிறார்கள்
.
எவ்வளவு
நாள்
?
இப்படி
காத்து
இருப்பது
.
மன
உளைச்சலின்
உச்சத்துக்கே
சென்றுவிட்டோம்
.
வீட்டில்
எவ்வளவு
நாள்
சும்மா
இருக்கமுடியும்
?
எங்கள்
வேதனையை
இந்த
அரசு
புரிந்து
கொள்ள
வேண்டும்
.
கலந்தாய்வுக்கான
அழைப்பை
உடனடியாக
தெரிவிக்க
வேண்டும்
.
ஏன்
இப்படி
இழுத்தடிக்கிறார்கள்
?
என்பதை
அவர்கள்
தெரிவித்தால்
நிம்மதியாக
இருக்கும்
.
இவ்வாறு
அவர்கள்
தெரிவித்தனர்
.
தேர்வு
பட்டியலில்
இடம்பெற்றுள்ள
சிலர்
,
கலந்தாய்வுக்கு
அழைக்கவில்லை
என்றால்
, ‘
தற்கொலை
செய்து
கொள்வதை
தவிர
எங்களுக்கு
வேறு
வழி
இல்லை
’
என்ற
வார்த்தையை
மனவேதனையில்
தெரிவிக்கின்றனர்
.
இதுதொடர்பாக
பள்ளிக்கல்வி
துறை
இயக்குனரை
நேரில்
சென்று
பார்க்க
முயற்சித்த
போது
அவர்
சந்திக்கவில்லை
.
மேலும்
,
செல்போனில்
தொடர்பு
கொண்ட
போதும்
அவர்
அழைப்பை
எடுக்கவில்லை
.
Social Media
Labels
10TH
12TH
3RD KALVI THOLAIKATCHI
5TH KALVI THOLAIKATCHI
Assembly
CM
CM CELL
cps
DAIRY
DEPARTMENT EXAM
DIKSHA
DIR.PROCEEDINGS
DUPLICATE CERTIFICATE
E-LEARN
EMIS
FORMS
G.O
GENERAL NEWS
GUIDE
ICT TRAINING
IFHRMS
Internet
KALVI TV
Mobile
NHIS
PAY MATRIX
PAY ORDER
PLUS 2
Reading
SCHOOL EDUCATION
spd
SPOUSE
STUDY MATERIALS
TC
TET
TIME TABLE
TNPSC
TRB
VISIT
WWW.TNTAM.BLOGSPOT.COM
Popular Posts
ஆசிரியர்களுக்கான படிவங்கள் -ALL FORMS- PDF FILE
6:46 PM
ஒப்படைப்புகள் பராமரிப்பு பதிவேடு சமூக அறிவியல்
4:22 PM
High tech Lab ல் தமிழில் Type செய்வதற்கு இந்தப் பக்கங்கள் உதவலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்-PDF FILE
9:44 PM
Categories
Tags